"போராடாமல் கிடைப்பது வெற்றி இல்லை" - அஞ்சலி கோபாலன் © Srishti Madurai.


"அஞ்சலி கோபாலன்" - சமூக ஆர்வலர் என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் ஒட்டுமொத்த சேவையையும் சுருக்கிவிட முடியாது..... “NAZ” என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர்..... சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்காக பல வருடங்களாக குரல் கொடுத்துவரும் இவரின் போராட்டங்களுக்கு 2005 ம் ஆண்டின் இந்தியாவின் சார்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிகழ்வையும், டைம்ஸ் பத்திரிகையின் உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் நிகழ்வையும் ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம்..... நம் நாட்டின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பாக சிறப்பிக்கப்பட்டது, காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்றது என்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்....எச்.ஐ.வி விழிப்புணர்வு, மாற்றுப்பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வு என்று பொதுவாக சமூக ஆர்வலர்கள் கூட போராடத்தயங்கும் விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர்..... “எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுவதால் அதன் பாதிப்பு மற்றவர்களுக்கு வராது “ என்று முதன்முதலில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் கையில் எடுத்தார், அதில் வெற்றியும் பெற்றார்..... அமெரிக்காவில் தொடங்கிய இவரின் போராட்டங்கள், இன்று நம் மதுரை வரை வேரூன்றி இருக்கிறது...... பிறப்பால் தமிழர் என்றாலும், ஏனோ இத்தகைய நபரை நம் ஊடகங்கள் பெரிதாக கௌரவிக்கவில்லை..... இவ்வளவு புகழுக்கும் உரியவராக இருந்தபோதிலும் அதைபற்றிய சிறு தற்புகழ்ச்சியும் இல்லாமல், மிகவும் எளிமையாக என்னுடன் பேசியது வியப்பாகவே இருந்தது.....
அந்த சுவையான நேர்காணலின், சுவைமிக்க சில பகுதிகள் இங்கே....... 

சமூக ஆர்வலர் என்றால் பொதுவாக அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி மட்டுமே போராடும் நபர்களுக்கு மத்தியில், சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு போராடும் எண்ணம் எப்படி வந்தது?

இது நானாக தேர்ந்தெடுத்த விஷயம் இல்லை.... அமெரிக்கா போன்ற நாட்டில் எயிட்ஸ் தொடர்பான விஷயத்தை பற்றி கையாளும் முறையை பார்த்த எனக்கு, இந்தியா வந்ததும் இத்தகைய எயிட்ஸ் நோயாளிகளை கையாளும் முறையை பார்த்து அதிர்ச்சியானேன்.... குறிப்பாக எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிராதவர்களாக விடப்பட்டதை கண்டு கவலைப்பட்டேன்.... பின்பு, ஒருசில குழந்தைகளை அரவணைத்த தொடங்கி பின்பு "NAZ" அமைப்பாக அது வளர்ந்து நிற்கிறது.... தொடுதல் மூலம் எயிட்ஸ் பரவாது என்ற அடிப்படை உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருந்தது....  பின்னர் எயிட்ஸ் நோயுடன் ஓரின விரும்பிகளை இணைத்து பார்க்கும் ஒரு அறியாமை  மக்களிடத்தில் இருந்தது.... எயிட்ஸ் பாதிப்புக்கு காரணமாக ஓரின சேர்க்கையை பலர் தவறுதலாக புரிந்துகொண்டதை மாற்ற நினைத்து இப்போது மாற்றுப்பாலின விழிப்புணர்வு போராட்டமாக என் களம் மாறிவிட்டது.... பால் சார்ந்த போராட்டங்கள் மட்டுமல்லாமல் மற்ற பல போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம்.... விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் எத்தகைய பாதிப்பு அடைந்தாலும் அவர்களுக்காக போராடுவோம், அது பால் சார்ந்த போராட்டமாக இருந்தாலும் ஒன்றுதான்....




பால் சார்ந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு பெண்ணாக எப்படி தயார் ஆனீர்கள்?... அதில் நீங்கள் பெற்றதும் இழந்ததும் என்ன?

உண்மைதான்.... பால் சார்ந்த இப்படிப்பட்ட போராட்டங்களில் ஒரு பெண்ணாக, அதுவும் தனி மனுஷியாக முதன்முதலில் களத்திற்கு வந்தபோது அரசியல் ரீதியாகவும், சில மத ரீதியான அமைப்புகள் மூலமாகவும், தனி நபர்கள் மூலமாகவும் என்று தடைகளும், மிரட்டல்களும் நிறைய வந்தன.... ஆனால், சிறுவயது முதலே ரொம்பவே மனதைரியத்துடன் வளர்ந்த எனக்கு, இந்த தடைகளும், மிரட்டல்களும் பெருசா தெரியல.....
அப்படி எனக்கு எதிர்ப்புகள் அதிகமாக அதிகமாகத்தான் எனக்கும் என் போராட்டங்களை அதிகப்படுத்தும் எண்ணம் வேகமாக வளர்ந்தது.... எதிர்ப்புகளை நான் எதிர்க்காமல், கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்களே சில நேரத்திற்கு பிறகு கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள்.... எத்தகைய பிரச்சினையையும் கையாளும் மனவலிமையையும், திறமையையும் அத்தகைய எதிர்ப்புகள் எனக்கு கொடுத்து....

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்களே......

அப்பா விமானப்படையில் பணிபுரிந்தவர், அம்மா இல்லத்தரசி.... அப்பா தமிழ்நாடு ,அம்மா பஞ்சாப்.... அதனால்தானோ என்னவோ, இந்தியாவோட வடக்கு முதல் தெற்கு வரை மொத்தமும் என் சொந்த ஊராக ஆகிவிட்டது.... அப்பப்போ எனக்கு குழந்தை இல்லைன்னு வருத்தம் வந்தாலும், என்னை "அம்மா"னு கூப்பிட இங்க ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இருக்குறப்போ எனக்கு அந்த கவலை பெருசா தெரியாது..... தனி மனுஷியா இருக்குறதால கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும், இப்படி தனி மனுஷியாக இருந்ததால்தான் என்னால் இவ்வளவு போராட்டங்களை தாண்டியும் அதே தைரியத்தோட மறுபடியும் நிற்க முடிகிறது.....

சமீபத்திய உங்கள் மதுரை வருகையில் முதல் முறையாக மாற்றுப்பாலின விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொண்டதை பற்றி......

பொதுவாக நான் இதைப்போன்ற அமைப்புகள் நடத்துற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.... ஆனால், மாணவர்களாக சேர்ந்து, சிருஷ்டி என்ற அமைப்பு சாராத நிறுவனகள் சாராத மாணவர் வட்டத்தின்  மூலம் தமிழ்நாட்டின் மதுரையில் நடத்திய இப்படி ஒரு விழாவில் கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப சந்தோஷமா இருந்தது.... உலகில் முதல் முறையாக இருபதிற்கும் மேற்ப்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது...... திருநங்கை ரேவதி, கல்கி சுப்பிரமணியன் போன்றவர்களுடன் அந்த மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ஒரு “அம்மா”வாக நான் அங்கு சென்றேன்..... அங்கு வந்த மாணவர்களின் பங்களிப்பை பார்த்தபோது, மனநிறைவாக இருந்தது.... மதுரை போன்ற ஒரு ஊரில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.....நான் மதுரைக்கு முதன்முதலா அப்போதான் வந்தேன்.... என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிடுச்சு அழகான மதுரை மாநகரம்....


சர்வதேச அளவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நம் இந்திய ஊடகங்களால் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?

இதில் நான் வருத்தப்பட ஒன்றுமில்லை.... விளம்பரங்களுக்காக நான் இப்படி விஷயங்களை கையில் எடுக்கவில்லை.... பி.பி.சி , டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்பு, நம் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் இந்த போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டன.... நான் பிரபலமாகனும் என்றோ, நான் ஊடகங்களில் மூலம் விளம்பரமாக வேண்டும் என்றோ எப்போதும் நினைத்ததில்லை..... நான் சொல்லும் செய்தி மக்களை சென்றடைய வேண்டும் என்றும், நாங்கள்  எதிர்பார்க்கும் விழிப்புணர்வு மக்களை சென்றடைய வேண்டும் என்றும்தான் நான் எதிர்பார்க்கிறேன்.... இது வெகுஜன மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், அது ஆங்கில ஊடகங்களோடு நிற்காமல் மாநில ரீதியிலான பிராந்திய மொழி ஊடகங்களின் மூலமாகவும் மக்களை சென்றடைய வேண்டும்.... ஆனால், அப்படி எந்த மாநில மொழி ஊடகமும் இன்னும் அத்தகைய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை..... அது மட்டுமே கவலையாக இருக்கிறதே தவிர, என்னை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை....


டெல்லி உயர்நீதிமன்றம் இ.பி.கோ 377வது சட்டத்திருத்தம் பற்றி ஓரின விரும்பிகளுக்கு  சாதகமான தீர்ப்பு வழங்கி இருந்தாலும், இன்னும் உச்சநீதி மன்றம் அது தொடர்பாக எந்த தீர்ப்பையும் சொல்லவில்லையே!.... உச்சநீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உண்மையில் டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று.... ஆனால், இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்காது என்றே நினைக்கிறேன்.... ஒரு விதத்தில், அதுவும் நல்லதுதான், எந்த விஷயமே போராடாமல் கிடைத்தால் அது முழுமையான வெற்றியாக இருக்காது.... ஓரின விரும்பிகள் விஷயத்திலும் போராடினால்தான் வெற்றி கிடைக்கும்... அந்த வெற்றியால் மட்டுமே இது அனைவரிடமும் இயல்பாக சென்றடையும் ஒன்றாக அமையும்....


சட்டத்தின் மூலம் மட்டுமே மாற்றுப்பாலினம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவந்துவிட முடியுமா?....

நிச்சயமாக முடியாது...... மக்கள் மனதில் மாற்றுப்பாலினம் மற்றும் மாற்றுப்பாலின ஒருங்கிணைப்பு பற்றிய தவறான எண்ணங்கள் ஆழமாக பதிந்திருக்கிறது... அத்தகைய எண்ணங்களை மாற்ற, ஒரு சட்டத்திருத்தம் போதாது.... சட்டம், அறிவியல், மருத்துவம், ஊடகங்கள், அரசு எந்திரம் என்று எல்லா துறைகளும் பல வழிகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும்..... எல்லாம் ஒரே நாளில் நடக்கும்னு நான் சொல்லல, அதே நேரத்தில் எல்லாம் ஒருநாள் மாறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.....


பேசும் அத்தனை வார்த்தைகளிலும் நம்பிக்கை நிரம்பி காணப்பட்டது..... ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மௌன புரட்சியின் விதை புதைந்திருப்பதாக எனக்கு தோன்றியது.... "போராடாமல் கிடைப்பது வெற்றி இல்லை" அஞ்சலியின் இந்த வார்த்தைகள் என் மனதை ஊடுருவி சென்றுவிட்டதை உணர்ந்து, அவரிடமிருந்து விடைபெற்றேன்....

பாலினம் எத்தனை வகை?.... நம்மை தேடி ...

வணக்கம்.

 நான் ஜான். ஷ்ருஷ்டி மதுரை என்ற LGBTQ organization இருக்கிறது. LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருகான (Gender queer) தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டி-யின் நோக்கமாகும்.I am the Director of Srishti- ஷ்ருஷ்டி மதுரை  இதன் நிறுவனர்  கோபி ஷங்கர் (சர்வ புண்யன்).
ஆண், பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் (20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

இந்த பாலின பாகுபாடு தான் துரிங் (Alan Turing) போன்ற பல வல்லுனர்களை கொன்றது.

அரிஸ்டாட்டில் (Aristotle)தொடங்கி ஹார்வே மில்க் (Harvey Milk) வரை நம் முன்தீர்மானிக்கபட்ட தவறான கருத்துக்கள் பற்றி ஒரு அலசல்...

Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே.
Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.

Gender என்றால்  நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Transwomen) பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.

Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது  இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender - இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.
Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?

A.Common genders:1. ஆண்,
                                  2. பெண்.
B.திருநர்(Transgender)
  1.திருநங்கை(Transwomen)
  2.திருநம்பி (Transmen)


C.பால்புதுமையர்-                       Genderqueer

   1.பால் நடுநர்-Androgynous

   2.முழுனர்-pangender

   3.இருனர்-Bigender

   4.திரினர்-Trigender

   5.பாலிலி-Agender

 6.திருனடுனர்-Neutrois


   7.மறுமாறிகள்-Retransitioners

   8.தோற்ற பாலினத்தவர்-Appearance gendered

  9.முரண் திருனர்-Transbinary

 10.பிறர்பால் உடையணியும் திருனர்-Transcrossdressers

 11.இருமை நகர்வு-Binary’s Butch

12.எதிர்  பாலிலி-Fancy

13.இருமைகுரியோர்-Epicene

14.இடைபாலினம்-Intergender

15.மாறுபக்க ஆணியால் -Transmasculine

16.மாறுபக்க பெண்ணியல்-Transfeminine

17.அரைபெண்டிர்-Demigirl

18.அரையாடவர்-Demiguy

19.நம்பி ஈர்ப்பினள்-Girlfags

20.நங்கை ஈர்பினன்-Guydykes

21.பால் நகர்வோர்-Genderfluid

22.ஆணியல் பெண்-Tomboy

23.பெண்ணன் –sissy

24.இருமையின்மை  ஆணியல்-Non binary Butch

25.இருமையின்மை பெண்ணியல்-Non binary Femme

26.பிறர்பால்உடைஅணிபவர் –Cross dresser

முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் Anderogynus people இவர்களை "பால்நடுநர்கள்" என்று அழைக்கலாம். இவர்கள் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை எந்த ஒரு பாலினமாகவும் நினைக்க மாட்டார்கள். திருநங்கைகள் தம்மை பெண் என அழைக்கப்பட விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தம்மை பாலினத்தின் அடிப்படையில் அழைக்கப்பட விரும்புவதில்லை. Gender Neutral என்ற வகையில் அழைக்கப்பட விரும்புவார்கள். அடுத்தவர்கள் Genderless people  பாலினமற்றவர்கள். Gender என்பதையே ஏற்க மறுப்பவர்கள். பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள்.

இன்னொரு பிரிவினர் Bigenders தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள். Trigenders என்பவர்கள் தம்மை ஆணாகவும், பெண்ணாகவும், திருனராகவும் எண்ணிக் கொள்பவர்கள்.
Gender Fluid என்பவர்கள் ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் தொகுப்பாக Gender Queer People என்போம். இன்னும் Gender non conformists  என்றெல்லாம் இருக்கிறார்கள்.


Sexual orientation-க்கும் Gender Orientation-க்கும் உள்ள வேறுபாடு Hetero Sexual- Straight எனப்படுவது பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது.

Gay, Lesbian பற்றிப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆணிடம் ஈர்ப்புக் கொள்ளும் ஆண்களை Gay என்றும் தமிழிழ் "நம்பிகள்" என்றும்  இவர்கள் Hetero Sexual தமது இணையிடம் எதிர்பார்க்கும் அன்பு, காதல், பாலியல் என அனைத்து உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பவர்கள். இதே இரு பெண்களிடையேயான உறவை Lesbian (நங்கை) எனலாம்.

Bi-Sexual இவர்கள் ஆண்களிடமும் கவரப்படுவார்கள் பெண்களிடமும் கவரப்படுவார்கள்.
இவை போன்று பரவலாக அறிந்த  பாலின ஈர்ப்பு (Sexual attraction) தவிர்த்து, Poly-Sexual, Asexual, Pansexual என்று நிறைய வகை உண்டு.

Asexual - எவ்வகைப்பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள். மக்கள் தொகையில் 1% இவர்கள் இருப்பதாக கின்ஸே (Kinsey) அறிக்கை கூறுகிறது.

Poly-Sexual - ஆண், பெண் தவிர திருநங்கைகள், திருநம்பிகள் என நான்கு வகையினருடனும் பாலியல் கவர்ச்சி உடையவர்கள்.

Pansexual - அனைத்துத் தரப்பினரிடமும் ஈர்ப்புடைய பாலினத்தவர்கள். இவர்கள் தாம் நாட்டம் கொள்ளும் நபர் குறித்த பாலியல் வேறுபாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளாதவரகள். அந்நபர் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, Bigender, Trigender போன்ற எத்தகைய தன்மையுடையவரிடமும் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

Girl Fags, Boy Dykes இவர்கள் Straight - வகையில் சேர்ந்த ஆண் பெண்கள்தான். இவர்களின் பாலியல் நாட்டமானது,

Girl Fags - வகைப் பெண்கள் Gay, Bisexual ஆண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்

Boy Dykes - வகை ஆண்கள் Lesbian, Bisexual பெண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்.

Intersex என்பவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ கருதப்பட முடியாதவர்கள் பிறப்பின் போதே ஆண் பெண் பாலுறுப்புக்களுடன் பிறந்தவர்கள். ஆணின் இனப்பெருக்க உறுப்புடனும், பெண்ணின் இனப்பெருக்க பால் சுரப்பி உறுப்புடனும் Intersex என்று சொல்லலாம். தமிழில் இடையிலங்கம் எனலாம். ஆண் பெண் உறுப்புகளை ஒருங்கே கொண்டவர்களை True hermophrodites எனலாம். இவர்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருத முடியாது. இந்நிலையில் Gays, Lesbians, Bisexuals போன்ற பதங்களுக்கு பொருளில்லாமல் போய்விடுகிறது...

Androphilia - ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்

Gynophilia - பெண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்.

சமுதாயத்தைப் பற்றி Gays, Lesbians பார்வை என்ன ? அவர்களைப் பற்றி சமுதாயத்தின் பார்வை என்ன ? இருவரிடையே உரையாடல் இல்லாததால் பிரச்சனை இருக்கிறது. அதை சிருஷ்டி சார்பாக ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்...

Gays, Lesbians, Bisexuals என்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று பார்க்கிறேன். அவர்களிடமுள்ள பிரச்சனை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டு கொள்வது.

தங்களின் உணர்வுகள் மற்றவர்களின் உணர்வுகளுடன் எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறிவது.

என்னுடைய நண்பன் ஒரு பெண்ணை ரசிக்கிறான். ஆனால் நானோ ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்படித்தான் Gay - இன் நிலை இருக்கும்.

இப்படியான பாலியல் விருப்பத்தின் வேறுபாடுகள் இருக்கும்போது, பல வகையின(பாலின) மக்களை பார்க்கின்ற சமுதாயம் அவர்களை வெறும் உடல் ரீதியான இன்பத்துக்காக இணைந்தவர்கள் என்றே கருதுகிறது. ஆனால் உண்மையில் சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது. அவர்களுக்குள்ளே என்னென்ன விதமான அழுத்தமிருக்கிறதென்றால், வெளியிலிருக்கும் சமூகத்தைப் பார்த்து, நான் இப்படியில்லை நானொரு Straight - தான் என்ற தூண்டலும், அதேவேளை தன்னுடலும் உணர்வும் விரும்பும் சமபாலுணர்வுத்தன்மையும் (Gay & Lesbian ) இருக்கும். இவ்விரு எண்ண முரண்பாட்டில் அவர்களது குழப்பம் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டிகள் உண்டு.

எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த சமுதாயம் ஒரு நல்ல பார்வையை கொடுத்ததில்லை. அவர்களை உடலுறவு இன்பத்தை நாடுபவர்கள், பெண்ணை (இழிவாக) நடத்துவது போல நடத்துவது, பகடி செய்வது மாதிரியிலான பிரச்சனைகள் சமுதாயம் அளிக்கிறது. இதனால் அவர்களுக்குள் இரட்டை வாழ்க்கை (Double Life) வாழ வேண்டியிருக்கிறது.

ஆணாக இருந்தால் தாய், தந்தை, தங்கையைக் கவனிக்கும் பொறுப்புடனும்,

பெண்ணாக இருந்தால் புகுந்த வீட்டிற்கு செல்லும் வகையில் நடந்து கொள்ளவும் வேண்டும் போன்ற செய்கைகளை மீறுவதாகத்தான் இந்த 
மாற்று பாலியல் ஈர்ப்பு உள்ளவர்கள்  நடந்து கொள்வார்கள்.
இவர்களது உணர்வு வெளிப்படும் போது இன்னொரு ஆணைத்தான் இவர்கள் தமது அனைத்து வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக தேடுவார்கள். பெண் சமபால்
விருப்பம் கொண்டோர் பெண்ணைத்தான் தேடுவார்கள். அதுதான் Gays, Lesbians...இது பாலுணர்வை மட்டுமே சார்ந்தது இல்லை
Straight - இல் உள்ள அதே காதல் அதே ஏக்கம், காதலன் தன்னுடனிருக்க வேண்டும், தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும், உணர்வுகளை, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்த மாதிரியான உணர்வுகளைத்தான் அவரகள் கொண்டிருக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான உணர்வுகள் எப்படி சிதறடிக்கப்படுகிறதென்றால், முக்கியமாக இரட்டை வாழ்க்கையினால் உள்ளுணர்வை விடமுடியாமலும் வெறும் பாலின்பத்தை நாடுவதில் மூலம் வடிகால் தேடுகிறது. நாம் (ஆண்) ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் ( சமபால் விருப்புடையோர்) போல் பூங்காக்களில் மட்டுமா உட்கார்ந்து இருக்கிறோம் ? (இணையாக எல்லா இடத்திலும் சுதந்திரமாகப் போய் வர முடிகிறது). ஏனிவர்கள் இப்படியிருக்கிறார்கள் ? அரசியலமைப்பு இன்னும் அவர்களை ஏற்றுக் கொள்ள வில்லை. 2009 - இல் சட்டப்பூர்வமாக்கினார்கள். இப்போது தவறான உறவு என்கிறார்கள். இது எங்களை அதிகமாக பாதித்தது. எங்களை ஏற்கெனவே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசே ஏற்றுக்கொள்ளாத போது, எங்களின் உரிமைகள் எப்படியிருக்கும் ? எங்களை யார் புரிந்து கொள்வர் என்கிற ரீதியிலான கவலைகள் எங்களனைவருக்கும் இருக்கும். வெளிப்படுத்துதல் - coming out என்பது தன்னுடைய உறவினரிடமோ, நண்பரிடமோ, குடும்பத்தினரிடமோ வேறு யாரிடமோ தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, தங்கள் எப்படி மாறுபடுகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வது. இப்படிப்பட்ட பகிர்ந்தல் நம் சமூகத்தில் இல்லை. அதற்கான வடிகால்களை சமூகம் ஏறடுத்தவுமில்லை. இந்த மாதிரியான செயல்களை அங்கீகரிக்கணும். அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டும். என்பதுதான் எங்களின் முக்கியமான வேண்டுகோள்.




மூன்றாம் பாலினம் என்கிறோம். மேற்கத்திய சூழலில் தம்மை இந்த மாதிரி வெளிப்படுத்திக் கொண்டவர்கள் யார் ?

ப்ளேட்டொ ஒரு சமபால் விருப்புடையவர் (Same Sex attraction)-(Gay) என வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடுத்து லியானார்டோ டாவின்சி, கடவுளும் மனிதனும் தொட்டுக் கொள்வது போல் ஓவியம் வரைந்த மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோர் சமபால் விருப்புடையோர். லியானார்டோ டாவின்சி ஒரு சமபாலின விருப்புக் கொண்டவர் என்பது வரலாற்றுப் பதிவுகள் மூலம் தெரிய வந்தது. ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு ரீதியாக ஆராய்ந்த போது, இயேசுவும், அவரது தாயும், திருமுழுக்கு யோவானும் உள்ள படத்தை வைத்து interpret பண்ணும் போது, அவரிடமிருந்த சமபால் விருப்பை விளக்குகிறார். உயிரோட்டமுடைய சிற்பங்களை செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ ஒரு சமபால் விருப்புடையவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் ஆலன் ட்யூரின் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆனால் கணிணியைக் கேள்விப்பட்டிருப்போம், அதில் உள்ள algorithms, coding ஆகியவற்றை உருவாக்கியவர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர். ரிக்கி மார்ட்டின், ஆடம் லாம்பர்ட்,
லேடி காகா ஒரு Bisexual- ஆண் பெண் என இருவரிடமும் ஈர்ப்புக் கொள்பவர். தமிழில் "ஈரர்" எனலாம். இதே போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்த மிகப்பெரிய எழுத்தாளர் அல்டேர் ரோட், கறுப்பினத்தைச் சார்ந்த பெண்ணியலாளர் ஒரு Lesbian. டி. ஹெச். லாரன்ஸ் ஒரு புதின ஆசிரியர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர் என்று ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். கிங் ஜேம்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் சமபால் விருப்புடையவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கிரேக்க சமூகத்தில் மிகச் சாதாரண விடயமாக இருந்ததுதான் இது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடயமாகவும் இருந்தது. ரோம சமூகத்திலுமிருந்தது. இதை எப்போது தவறாகப்பார்க்க ஆரம்பித்தார்களெனில், தாமஸ் அக்கியூரஸ் என்ற கிறித்தவ மறையியலாளர், இயற்கைக்கு ஏதுவான சேர்க்கை, இயற்கைக்கு மாறான சேர்க்கை என்று அவர்தான் முதன் முதலில் எழுதினார். இனப்பெருக்கம் செய்வதற்காக பெண்ணுறுப்பு வழியாக கலவி செய்வது மட்டும்தான் இயற்கையான சேர்க்கை அதாவது மிஷனரி நிலையில் இருந்து கலவி செய்வதுதான் சரியானது என்று அவர்தான் சொன்னார். குடியேற்றக்காரர்கள் (காலனியாளர்கள்) கொண்டுவந்ததாக பெண்ணியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர் அப்படி எழுதி வைத்தார், பின்பு வந்த குடியேற்றக்காரர்கள், ஆட்சியாளர்கள் கிறித்தவ மதத்தைப் பரப்பினார்கள். இப்படியாக பழைய கலாச்சாரங்களிலிருந்து சமபால் சேர்க்கையை அழித்தார்கள். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களை தென் அமெரிக்காவில் Two spirit people என்று சொல்வார்கள். இவர்களின் கலாச்சாரம் தாக்கியழிக்கப்பட்டது. அதற்கு முன் இருந்த சமபால் சேர்க்கை குறித்த தடயங்களை மொத்தமாக அழித்தார்கள். இது மாதிரியான நிறைய சமபால் சேர்க்கைக்கெதிரான செயல்கள் தேவாலயங்களில் இருந்தன. 1880 - இல் மெக்காலே காலத்தில்தான் சமபால் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டது. அதை Victorian view on sex or victorian mentality எனலாம். அதற்கு முன்பு வரை சமபால் சேர்க்கை நம் கலாச்சாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன:
திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை. தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்துறை இவர்களை அடிக்கும் போது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.


பாலியல் தொழில் இல்லை பிச்சையெடுப்பது, இவை தவிர வேறு தொழில் இல்லை ........ஆம். இப்படியாகி விட்டது. இன்னொரு சிரமமான சூழ்நிலை வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர் ? முதலில் அவர்களுக்குக் கல்வியறிவு இருக்கிறதா ? கல்வியே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது அந்த வளரிளம் பருவத்தில் (adult) உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் என்பேன். கொலை செய்வதும் கூட கொடுமையானதுதான். ஆனால் தானிருக்கும் உடலையே தானே வெறுத்து வாழ்வதை ஒரு நிமிடம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலையில் போகும்போது திருநங்கைகளை வெறுப்புடன் பார்க்கும் நாம் இது பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இன்னொன்று திருநம்பிகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள். இவர்கள் குறித்த விழிப்புணர்ச்சி குறைவு. திருநம்பிகளை பெண் சமபால் விருப்புக் கொண்டவர்கள் (Lesbians) எனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களிடம் ஈர்க்கப்படும் பெண்களையே Lesbians என்று சொல்கிறோம். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பெண்களே திருநம்பிகள் ஆவர். இந்த திருநம்பிகள் பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ளும்போது அவர்களை Trans-men என்று அழைக்கலாம். பெண் வளர்கையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கே குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பர். அக்குழந்தை என்னவாக விரும்புகிறது என்பதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பதே சமூகச் சுழற்சியாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உடலை வெறுத்து வாழ வேண்டும். வீட்டினரின் விருப்பத்தையும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவது மாதிரியான அழுத்தங்களை எதிகொள்ள வேண்டும். இப்படியாக அவர்களது சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியேறினாலும் சமூகம் அவர்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கிறது ? பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் இருக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் என எல்லா வகை மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாக, பந்தாடப்படுபவர்களாக, விளையாட்டுப்பொருளாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கும் நிலை இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நிமிடம் உங்கள் உடலை வெறுத்து வாழ்ந்து பாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அப்பேர்ப்பட்டவர்களை சமூகம் எப்படி வன்கலவி செய்கிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

அரவான் குறித்து ? அர்வானுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அரவானே ஒரு திருநங்கையா ?

அரவான் அர்ச்சுனரின் மகன். அரவம் என்றால் தமிழில் பாம்பு என்று பொருள். அவருக்கு பாம்புக் குறியீடு உள்ளதை நிறைய இடங்களில் பார்க்கலாம். குருக்ஷேத்திரப் போர்க்காலங்களில் காளிக்கு பலி கொடுப்பதற்காக அர்ச்சுனரின் மகனைக் கேட்டார்கள். அதாவது வெட்டிப் பலி கொடுப்பது மாதிரி. அல்லது சில நேரம் அவரை அவரே வெட்டிக் கொண்டு சாகிறது மாதிரியும் இருக்கும். அரவான் தான் இதுவரை தாம்பத்ய இன்பமே அனுபவித்ததில்லை என்கிறார். திருமணத்திற்காக பெண்களைக் கேட்ட போது அடுத்த நாளே இறக்கப் போகிறவர் என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் விஷ்ணு மோகினி வேடத்தில் வந்து அவருக்கு மனைவியாக இருக்கிறார். பின்பு அரவான் பலி கொடுக்கப்படுகிறார். இந்த அரவான் நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்.


பாலினத்தின் பல நிறங்கள், வானவில்லின் பல நிறங்கள் போல. நாங்கள் வானவில்லைத்தான் எங்கள் சின்னமாக வைத்திருக்கிறோம். LGBT - குழுவின் கொடி வானவில்தான். ஒரே நிறமாகத் தெரிந்தாலும் பல வண்ணங்களாகச் சிதறியிருக்கிறது.
எங்கள் மக்கள் வெளிவரும்போதுதான் எங்கள் பிரச்சனைகள், குரல்கள், செய்திகள் மக்களுக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். திருநங்கைகள் ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்ததற்கும், தற்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயமும் வெளிவரும்போதுதான், கலைத்துறையாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் சரி எங்களைப் பற்றித் தெரியவரும்...





Asia's First Genderqueer Pride Parade on Media




ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா - Asia's First Genderqueer Pride Parade by RJ Naveen Radio Mirchi

ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன.’ புருவங்களை உயர வைக்கும் இச்செய்தியை கண்டும் காணாமல் எவராலும் சென்றிருக்க முடியாது. ‘ஸ்ருஷ்டி’ என்கிற மாணவர் அமைப்பு மதுரையில் நடத்திய பேரணியில் தான் இடம்பெற்றிருந்தது இந்த வாசகம். வியப்பின் காரணமாகவும், அதனின் விளக்கம் கேட்டும் ‘ஸ்ருஷ்டி’யின் மதுரை நிறுவனர் திரு.கோபிசங்கரைச் சந்தித்தோம்.கல்விக்கும் பாரம்பரியத்திற்கும் பெயர் போன மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் தான் கோபிசங்கர் என்று தெரிந்ததும், அவரது கல்லூரி வளாகத்திலேயே அவருடன் நேர்காணல் கண்டோம்.


கே: ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபது பாலினங்கள் இருப்பது உண்மையா?
ஆம். பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி கருதிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. எனினும், சமீபகாலமாக திருநங்கைகள் மீதான வெளிச்சமும் அளப்படியாகவே உள்ளது. அனால், உண்மையில் இருபதிற்கும் மேற்ப்பட்ட பாலினங்கள் உள்ளன. இப்போது இருக்கும் உலகில் இதற்கான விழிப்புணர்வு இன்றியமையாததாகிறது.


கே: அந்த பாலினங்களை பட்டியலிடமுடியுமா?
முடியும்.
அ) பொதுப் பாலினம் ஆண்- Male,பெண்- Female

 ஆ) திருநர் - Transgender
திருநங்கை - Transwomen
திருநம்பி- Transmen

 இ) பால் புதுமையர்- Gender queer
1. பால் நடுநர் - Androgyny
2. முழுனர் - pangender
3. இருனர்- Bigender
4. திரினர்- Trigender
5. பாலிலி -  Agender
6. திருனடுனர் - Neutrois 
7. மறுமாறிகள் - Retransitioners
8. தோற்ற பாலினத்தவர் - Appearance gendered
9. முரண் திருநர் - Transbinary
10. பிறர்பால் உடையணியும் திருநர் - Transcrossdressers
11. இருமை நகர்வு - Binary's bitch
12. எதிர் பாலிலி - Fancy
13. இருமைக்குரியோர் - Epicene
14. இடைபாலினம் -  Intergender
15. மாறுபக்க ஆணியல் - Transmasculine
16. மாறுபக்க பெண்ணியல் - Transfeminine
17. அரைபெண்டிர் - Demi girl
18. அரையாடவர் - Demi guy
19. நம்பி ஈர்ப்பனள் - Girl fags
20. நங்கை ஈர்பனன் - Guy dykes
21. பால் நகர்வோர் - Genderfluid
22. ஆணியல் பெண் - Tomboy
23. பெண்ணன் - Sissy 
24. இருமையின்மை ஆணியல் - Non binary Butch
25. இருமையின்மை பெண்ணியல் - Non binary femme
26. பிறர்பால் உடை அணிபவர் - Cross Dresser
இன்னும் பல...பாலினங்கள் பற்றிய முழுமையான அறிவை மக்கள் கொள்ள வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இப்பாலினங்கள் குறித்த விழிப்புணர்வே இப்போதைய உடனடித் தேவை.


கே: உடனடித் தேவைக்கு அவசியம் என்ன?
சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. மேற்கூறிய மக்களாலும் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்ற முடியும். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும்  பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம்  மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலும் இதை பற்றி விரிவான ஆராய்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே  ஈவ் செட்விக்  (Eve Sedwick ) என்பவரால் கோணல் கோட்பாடு (queer theory) மற்றும் LGBTQI படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 து  ஐரோப்பிய  மற்றும் அமெரிக்க பல்களைகலகங்களில் பாடமாக துவக்கப்பட்டது. இந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது  ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாட செத்துபிளைக்கின்றனர் .  உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு  பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். இந்த விழா நடைபெறும் பொது கூட மூன்று நபர்கள் தற்கொலை செய்துகொண்டனர், கடந்த 2010 முதல் இந்த மாதம் வரை  இப்படி தங்கள் பாலினத்தை பற்றிய தெளிவில்லாமல், வாழ்வதற்கு போதிய சுதந்திரம் இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்துள்ளனர் இதை இந்திய அரசாங்கமும் கண்டுகோள்ளவில்லை. இப்படி பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை  தருவதே இந்த பிரச்சனையை  முடிவுக்கு கொண்டுவரும்.


கே:டுரிங் வானவில் விழா என்றால் என்ன?
 ஆலன் டூரின் என்பவரைப் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடுக்க வல்ல ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது. தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி.!-அவர் தான் ஆலன் துரிங் (Alan Turing) ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் சாதிக்க இயலாத விஷயங்களை, நாற்பத்து ஓரு வயதிற்குள் எந்த வாய்ப்புமில்லாமல் சாதித்து காட்டியவர் துரிங். பாலின பாகுபாடு  என்ற ஒரே காரணத்தால் அவரின் தனி சுதந்திரம் பறிக்கப்பட்டு மிக ஆழ்ந்த துயரங்களில் வாழ்ந்த இவரின்   நூற்றாண்டு வருடமிது. அவரை கொன்ற அறியாமை நம் சமூகத்திலிருந்து விலகி விட்டதா? இல்லை.!, இருபத்தியோராம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிபாகக் கருதப்படும் கணிணி உலகின் Artificial Intelligenceன் தந்தை டுரிங் . அவர் சமபால் ஈர்ப்புடயவர் என்ற காரணத்தினாலேயே ஆங்கில அரசு அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது. துரிங்கை நினைவு  படுத்தும் விதமாக மதுரையின் முதல்  வானவில் திருவிழாவை  "டுரிங் வானவில் திருவிழா "  என்று பெயரிட்டோம்.



கே: ‘ஸ்ருஷ்டி’ அமைப்பு பற்றி?

ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டியின் நோக்கமாகும். இதன் தனித்துவம் என்னவெனில், இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு சாரா, நிறுவனம் சாரா வட்டமாகும்.


கே: இப்போது நடைபெற்ற இந்த வானவில் திருவிழா திருப்தி அளிக்கிறதா?
பெரிய அளவில் திருப்தி அளிக்கிறது. ‘ஸ்ருஷ்டி’ இதை அறிவித்தவுடன் ‘NAZ’ அமைப்பின் நிறுவனர் திருமிகு .அஞ்சலி கோபாலனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நங்கள் பெரும் வெகுமதியாகக் கருதுகிறோம். இது முழுக்கவே மாணவர்களால் நடத்தப்படுவதால் மட்டுமே அவர் இசைந்தார். கடந்த 2009-ம் ஆண்டு, தில்லி உயர்நீதிமன்றம் புதுப்பித்த IPC 377-ம் சட்டத் திருத்தம் அவர்களாலேயே சாத்தியம் மற்றும் அஞ்சலி 2005 நோபெல் பரிசுக்காக பரிதிந்துரைக்க பட்டார், 2012 லண்டன் டைம் இவரை உலகின் அதிக செல்வாக்குள்ள பெண் என்று வெளியிட்டது, எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பராமரிப்பகத்தை உருவாகினார் . இவர் தவிர லீனா மணிமேகலை, திருநர் கல்கி சுப்ரமணியம்,ரேவதி, மற்றும் சாரு, கட்டியகாரி நாடகக்குழு  ஸ்ரீஜித் சுந்தரம், ‘சென்னை தோஸ்த்’ அமைப்பினர், ‘நிறங்கள்’ ஆகியோர் எங்களுக்குக் கொடுத்த ஆதரவு எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது.


கே: இதன் எதிர்கால பாய்ச்சல் எவ்வாறு இருக்கும்?
முழு வீச்சாக அமையும். குறிப்பாக, ஊடகங்களின் பங்கு இவ்விஷயத்தில் குறிப்பிடும்படியாக இல்லை. அதை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். காரணம், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட ஊடகங்களால் மட்டுமே முடியும். இதற்கு முன்பும் பலர் இதைப் பற்றி பேசியிருந்தாலும், அதை இப்பொது முற்றிலும் புதிய பரிணாமத்திற்கு மாற்ற வேண்டிய கடமை இருப்பதாய் உணர்கிறோம். மிகவும் பழமையான பாரம்பரியமான நகரம் என்றழைக்கப்படும் மதுரையிலேயே இத்தகைய வரவேற்பு அமைந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களின் பணி, நாங்கள் எண்ணியது முடியும் வரை தொடரும்: முடிந்த பின்பும் தொடரும்!

ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)


ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
Elen and Kiran our supporters